தான் எழுதிய பல கதைகளில் இருந்து வெறும் ஏழு கதைகளை எடுத்து *லட்சத்தில் ஒருத்தி* என்ற பெயரில் சிறுகதை நூலாக்க முடிந்தார் எழுத்தாளர் *செம்மை உமா* அவர்கள் *நூலேணி பதிப்பகம்* பதிப்பித்த இந்த நூல் இன்று *தினமலர்* இதழில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. *எழுத்தாளரின் முதல் நூலை வாங்கி பாராட்டுவோம். அதன்மூலம் மகிழ்ச்சியைப் பரப்புவோம்.* நூல் விலை ₹130 + அஞ்சல் தொகை ₹20 *மொத்தம் ₹150/- செலுத்துங்கள். சிறந்த சிறுகதை நூல் இல்லம் தேடி வரும்*
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் விழா அவர் பிறந்த இராயவரம் ச.கதி காந்தி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள சிலைக்கு மாணவர்கள் மற்றும் அழ.வள்ளியப்பா அவர்களின் மகன். வ.அழகப்பன், மாப்பிள்ளை திரு நாச்சியப்பன் அவர்களோடு இணைந்து மாலை அணிவித்தல் நிகழ்ச்சி. ஏழு ஆண்டுகளுக்கு முன் காரைக்குடி வந்தபோது சென்று காண ஆசைப் பட்டேன். நேர சிக்கலால் பார்க்க முடியாமல் போனது. 2025 ஆம் காண கிடைத்ததிலும் மாலை அணிவித்ததிலும் லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பித்த நூல்கள் சிலவற்றை அவர் பார்வைக்கு கொண்டு சென்றதிலும் பெரு மகிழ்ச்சி
#லாலிபாப்_சிறுவர்_உலகத்தில் புதிய_முயற்சி சிறுவர் இலக்கியத்தில் பலரின் பங்களிப்பு அளப்பரியது. புதுவையைச் சேர்ந்த கவிஞரேறு #வாணிதாசன் அவர்கள் குழந்தை இலக்கியத்திற்காக பல பாடல்களை இயற்றியுள்ளார். அப்பாடல்களில் இருந்து சிலவற்றை தொகுத்து * #மரக்குதிரை தலைப்பில் வெளியிடுகிறோம். லாலிபாப் குழந்தைகள் பாடும் இவரின் பாடல் காணொளியை QR code வடிவில் மாற்றும் பணி நடைபெறுகிறது. இளைய சமுதாயத்திற்கு இவர்களின் பாடல்களைக் கொண்டுசேர்க்கும் முயற்சியில் #லாலிபாப் சிறுவர் உலகம் மூலம் ஈடுபட்டுள்ளோம். *** தங்களால் இயன்ற அளவு நூலைப் பெற்று மாணவர்களுக்கு பரிசளிக்கலாமே... **" இதற்கு உறுதுணையாக இருந்த கவிஞரேறு வாணிதாசன் அவர்களின் பெயரன் திரு.முருகன் Murugan Murugan அவர்களுக்கு லாலிபாப் சிறுவர் உலகம் சார்பாக நன்றி கவிஞரேறு வாணிதாசன் (சூலை 22 1915 - ஆகத்து 7, 1974) புதுவையைச் சேர்ந்த தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். இவர் 'பாரதிதாசன் பரம்பரை' என்றழைக்கப்படும், பாவலர் தலைமுறையில் வருபவர். மேலும் தகவலுக்கு https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%...
Comments
Post a Comment