#நூல்அறிமுகம் நூல்: #நாட்டுப்புற_இரங்கற்பா (நாட்டுப்புறக் கல்லறையில் எழுதப்பட்ட கையறுநிலை) மொழிபெயர்ப்பு : பேராசிரியர் #இராம. #குருநாதன் பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் சென்னை. 📞98412 36965 ₹100/- ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, கவிதைகளுக்குள் நுழைந்து செல்லும் போது, பேராசிரியரின் ஆங்கில ஞானத்தையும், தமிழ் அறிவையும் அறிய முடியும். மொழிபெயர்ப்பாளர் எந்தப் படைப்பாளிக்கும் துரோகம் செய்யக்கூடாது என்னும் எண்ணத்தில் ஊறிப்போய் இருப்பவர் ஒரு சிலரே. உமார்கய்யாம் பாடல்களைக் கவிமணி தமிழாக்கம் செய்திருக்கிறார். படித்துப் பார்க்கும் போதுதான் தெரியும்... உமார்கய்யாம்மைத் தேடி அலைந்து தோற்றுப் போக வேண்டியிருக்கும். ஆனால் இங்கே பேராசிரியர் இராம. குருநாதன் மொழியாக்கம்தான் செய்கிறோம் என்ற நினைப்பிலேயேயும், மூல ஆசிரியருக்கு எவ்வித துரோகமும் செய்யக்கூடாது என்ற உறுதியுடனும் செயல்பட்டதாலே, நமக்கு தாமஸ் கிரே பாமரனுக்கும் புரியும் தமிழ் மொழியில் கிடைத்திருக்கிறார். - முனைவர் பேராசிரியர் #ராஜ்ஜா மேனாள் ஆங்கிலப் பேராசிரியர் புதுவை அரசு கல் லூரி, புதுச்சேரி
Raja, I am Ramesh Anand, haiku poet.
ReplyDeletePlease contact me @ 99000 23144.
Have some Tamil haiku reading opportunity at International VIrtual Poetry Reading forum.
Hope you remember me. I translated many of your and other tamil poets haiku.
Thanks,
Ramesh Anand