Posts
Showing posts from 2018
- Get link
- Other Apps
வெற்றி விளிம்பில் முளைத்திருக்கும் மகிழ்மனம்! Kannikovil Raja எப்போதும் மகிழ்மனம் வாய்ப்பது ஒருசிலருக்கே அமைந்துவிடுகிறது. ஹைக்கூ புயலில் சிக்கிய படகாய் இருந்த காலந்தொட்டே அறிமுகமானவர்தான் என்றாலும், அவ்வப்போது மட்டுமே பார்த்து பேசுகிற வாய்ப்பே இருந்தது. நண்பர் புதுவைத் தமிழ்நெஞ்சனுடன் புதுச்சேரியில் துளிப்பா நூற்றாண்டை கொண்டாட முயற்சித்த வேளையில் "தோழர் என்னுடைய நூலையும் வெளியிடலாமா?" என வினாக்குறியோடு அணுகியவர். அதுஎன்னவென்றே தெரியவில்லை. எப்போதும் யாருக்கும் அவ்வளவு விரைவாக நூலை வடிவமைத்துக் கொடுத்ததாய் சரித்திரம். பூகோளம் எதுவும் எனக்கில்லை. என் வேலை அதுமாதிரி. ஆனால் இவரின் (மகரந்தம் மறைத்த மொட்டு) நூல் இரண்டரை நாளில் வடிவமைத்து, அச்சடித்து வெளிவந்து நூல் வெளியீடும் நடந்தேறியது. அதனை கருத்தில் கொண்டு இப்போது 'குளிர் தூவும் ஆறு" என்கிற தலைப்பில் அமைந்த புதுக்கவிதையின் உருவினூடே நவீனமாய் அமைந்த கவிதைகள் கொண்ட நூலைத் தந்தார். வழக்கம் போல் இந்நூலுக்கு தாமதம் ஆனது. ஆனால் என்னால் அல்ல.. அட்டைப்படத்தினால்... அதற்கு பாலமாய் அமைந்தவர் நறுமுகை ஜெ.ரா. இப
என்னைப் புரட்டிய கவிதை....
- Get link
- Other Apps
என்னைப் புரட்டிய கவிதை.... - கன்னிக்கோவில் இராஜா எப்போது என்னைக் காணும்போதும் புத்தகம் குறித்தே உரையாடலைத் தொடங்குவார்... அவர் கையில் இருக்கும் புத்தகத்தை வாசிக்கக் கொடுக்கும் போது, பிறந்த குழந்தையை வாங்கிக் கொள்வதைப் போல பெற்றக் கொள்வது எனக்குப் பிடித்தமானது. இந்த முறை நண்பன் செந்தில்பாலாவின் 'வவ்வவ்வ' சிறுவர் பாடல் நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்னைக்கு வந்திருந்தவர், விழா முடிந்ததும் "இதை நீங்க வச்கிக்கங்க. யாருக்கு கொடுக்க வேண்டும் என உங்களுக்குத்தான் தெரியும்" என்றபடி கொடுத்த நூல் 'அறத்தான் வருவதே' என்ற நறுமுகை வெளியீடான குறிஞ்சிமலர் 2வது நூல். அதை அவசரத்தில் வாங்கி பையில் வைத்துவிட்டேன் இன்று சற்றே ஓய்வு கிடைக்க அதை புரட்டினேன். ஒரு கவிதை என் கண்களை அப்பக்கத்திலியே நிறுத்தியது. அக்கவிதை ஏற்கனவே என்னைப் புரட்டியக் கவிதைதான். இன்று படித்த போது எனக்குப் பிடித்த "குழந்தையின் பாத வண்ண மலரை பிடிக்காமல் செய்த கவிதை. ஏற்கனவே இந்நூலை வடிவமைப்பு செய்த போதும், அதன் பிறகும் பலமுறை படித்ததுதான்... ஆனாலும் முதல்முறை படிப்பவரை முழுவதுமாய் உள்வாங்க வைக்கும், லாவ
- Get link
- Other Apps
https://tamil.thehindu.com/society/kids/article24750540.ece கதை: நூடுல்ஸ் கேட்ட அணில்! Published : 22 Aug 2018 10:57 IST Updated : 22 Aug 2018 10:57 IST கன்னிக்கோவில் ராஜா - + SUBSCRIBE TO THE HINDU TAMIL YouTube அம்மா கொண்டுவந்த பழங்களைப் பார்த்ததும், குட்டி அணிலின் முகம் சுருங்கியது. “எப்பப் பார்த்தாலும் இதே பழங்களும் பருப்புகளும்தானா? வேற எதுவும் சாப்பிடக் கொடுக்க மாட்டீங்களா?” என்று கோபமாகக் கேட்டது. “பழங்களும் பருப்புகளும்தானே நம் உணவுகள். இவற்றைச் சாப்பிடாமல் வேறு என்ன வேணும் உனக்கு?” என்று புன்னகையோடு கேட்டது அம்மா அணில். “அம்மா, இந்தக் காட்டுக்குச் சுற்றுலா வரும் மனிதக் குழந்தைகள் சாப்பிடுவதுபோல இட்லி, தோசை, நூடுல்ஸ் என்று எனக்கும் செய்து கொடுக்கக் கூடாதா? “என்னது? இட்லி, தோசை, நூடுல்ஸா? அவர்கள் எல்லாம் மனிதர்கள். இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள். நாம் இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளை அப்படியே சாப்பிடக்கூடியவர்கள். அவரவர் உணவுப் பழக்கப்படிதான் அவரவர் சாப்பிடணும். இயற்க
- Get link
- Other Apps
ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேட்டில் கன்னிக்கோவில் இராஜாவின் சிறுவர் பாடல் நூல்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்காக அளிக்கப்பெறும் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேட்டில் “குழந்தைப் பாடல்கள் - ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் முனைவர் இ.ஸ்டான்லி ஜோன்ஸ் கருணாகரன் எம்.ஏ., எம்ஃபில், பி,எச்டி, துறைத்தலைவர், முதுகலை மற்றும் ஆய்வியல் தமிழ்த்துறை, ஊரிசு கல்லூரி வேலூர், அவர்களின் மேற்பார்வையில் ‘மழலைச்சிரிப்பு’, ‘மியாவ் மியாவ் பூனைக்குட்டி’ ஆகிய நூல்களை ஆய்வாளர் க.வன்னியர்செல்வி எம்.ஏ., பி.எட்., அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தியுள்ளார்.