Posts

Showing posts from November, 2021

கதுவக்கப் பள்ளியில் லாலிபாப் புத்தகங்கள்

Image
  சிறார் நூல்கள் சிறார் கைகளில்* நீங்களும் இந்த நல்ல செயலை செய்ய நூல்களை வாங்கி பரிசளிக்கலாமே* ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், தவிட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு அமெரிக்காவில் வசிக்கும் *திரு. இளமாறன் மற்றும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி* அவர்கள் பள்ளி நூலகத்திற்கு *எழுத்தாளர்கள் கன்னிக்கோவில் இராஜா, நல்லாசிரியர் விஜயலட்சுமி, மருத்துவர் சூர்யா மற்றும் நான்காம் வகுப்பு மாணவி ஹரிவர்ஷ்னி* ஆகியோர் எழுதிய சிறுவர் இலக்கிய நூல்களை நன்கொடையாக அளித்துள்ளனர்.  *லாலிபாப் சிறுவர் உலகம் சார்பாக வாழ்த்துகள்.

சுட்டி உலகம் இதழில் சிறார் பாடல்

Image
  சிறுவர்களுக்கான சுட்டி உலகம் சேனலில் நான் எழுதிய பாடலை மிகச் சிறப்பாக அனிமேஷனோடுபதிவு செய்திருக்கிறார்கள். எழுத்தாளர்கள் Kalayarassy Pandiyan , Geetha Mathi  மற்றும் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இதையும் காண: அல்லிக் குளத்து யானை https://youtu.be/pxS9nfuu7Uk வெட்கம் கொண்ட கொக்கு https://youtu.be/YD3ChsW39DE

மாணவி எழுதிய கதை புத்தகம்

Image
  #புத்தகஅறிமுகம் குழந்தைகளிடம் படைப்புத்திறன் மண்ணுக்குள் புதைந்த விதை போல மறைந்து இருக்கிறது. விதைகளை மீட்டெடுக்கும் மழைத்துளி போல நாம் அதை வெளிக்கொணர வேண்டியது அவசியமாகிறது. பெற்றோர், ஆசிரியர், குழந்தை நலனில் அக்கறை கொண்டோர் என யாராவது ஒருவர் அதை வெளிக் கொண்டுவரும் பட்சத்தில் சிறுவர் இலக்கியம் தழைத்தோங்கும். சமகாலத்தில் சிறுவர்க்கான படைப்புகளை சிறுவர்களே படைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அந்தத் தொடர் ஓட்டத்தில் இதோ #லாலிபாப்_சிறுவர்_உலகம்  சார்பாக வெளிவந்துள்ளது #சிறகடிக்கும்_பட்டாம்பூச்சி சிறுவர் கதைகள் நூல் சென்னை, பட்டாபிராமில் வசிக்கும் #பிரவந்திகா தனது 12 கதைகளை நூலாக்கி இருக்கிறார். இந்நூலில் பல சிறுவர்கள் ஓவியங்களும் வரைந்திருக்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி. இளம் எழுத்தாளர் பிரவந்திகா மற்றும் பெற்றோருக்கும் வாழ்த்துகள்  மகிழ்ச்சி பரவட்டும். நூல்: #சிறகடிக்கும்_பட்டாம்பூச்சி நூலாசிரியர் : #சு_பிரவந்திகா முதற்பதிப்பு: 7.11.2021  வெளியீடு: #லாலிபாப்_சிறுவர்_உலகம்

லாலிபாப் சிறுவர் உலகத்தின் புதிய நூல்

Image
லாலிபாப் சிறுவர் உலகத்தின் புதிய நூல் குழந்தைகளுக்கான சிறுவர் பாடல் நூல் பெங்களூரில் வசிக்கும் எழுத்தாளர் வ. வெ. இராஜாமணி அவர்கள் கவிதைகள், கதைகள், நாவல்கள், சிறுவர் பாடல்கள், சிறுவர் கதைகள், ஆன்மிகம் என அனைத்து தளத்திலும் இயங்கி வருபவர். சிறுவர்களுக்காக இரண்டு கதை நூல்களும் இரண்டு நாவல்களும் எழுதியுள்ளார். இந்த #பாப்பா_பாப்பா_கவிபாடு என்கிற இந்த நூல் சிறுவர் பாடல் நூல். இதில் பல பாடல்கள் குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி படிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்நூலை லாலிபாப் சிறுவர் கழகத்தின் சார்பாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்நூலை வாங்கி குழந்தைகளுக்கும் நூலகத்திற்கும் பரிசளிக்கலாம்.  மகிழ்ச்சி பரவட்டும்🍭 #lollipopbooks #kidsrhymes #rajamanibook #lollipipchildrenswoeldbooks #tamillanguage #tamizhmozhi #tamilkidssong #tamilboardbooks #tamilchildrensbook #tamilkidsbooks #tamiltoddlerbooks #tamiltoddler #unique #uniquetamilbooks  

லாலிபாப்பின் புதிய வெளியீடுகள்

Image
 

புத்தகங்களைப் பரிசளிப்போம்

Image
 *நூல்களைப்_பரிசளிப்போம்* புலம்பெயர்ந்து அயல்நாட்டில் வசிக்கும் *திரு. இளமாறன் Elamaran Perumal மற்றும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி Anbudan Ananthi அவர்கள்* ஒவ்வொரு முறையும் தமிழ்வழி படிக்கக்கூடிய பள்ளிகளுக்கும் நூலகங்களுக்கும் புத்தகங்களை வாங்கி நன்கொடையாக அளித்து வருகிறார்கள். அந்த வகையில் *ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், #தேவர்மலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு* புத்தகங்களை வழங்கியிருக்கிறார்கள். இதில் பல படைப்பாளிகளின் நூல்கள் சென்று இருப்பது பாராட்டுக்குரியது இவர்களுக்கு *லாலிபாப் சிறுவர் உலகம்* சார்பாக வாழ்த்துகள். இது போல பலரும் நூல்களை வாங்கி பரிசளித்தால் படைப்பாளிகளுக்கும் படிப்பவர்களுக்கும் மிகுந்த மன நிறைவைத் தரும் என்பதில் ஐயமில்லை. மகிழ்ச்சி பரவட்டும். வழங்கப்பட்ட நூல்கள் & படைப்பாளர்கள்* 1. *வாலைத் தேடிய பல்லி (சிறுவர் கதைகள்)* நல்லாசிரியர் வ. விஜயலட்சுமி, புதுச்சேரி 2. *சென்னி முன்னா செண்பை கிராமம் (நாவல்)* மரு. சூர்யா, கன்யாகுமரி. 3. *மூணு கண்ண வந்துட்டான் (சிறுவர் கதைகள்)* ஹரிவர்ஷ்னி ராஜேஷ், கோவை *கன்னிக்கோவில் இராஜாவின் நூல்கள்:* 4. மே.. மே.. ஆட்டுக்குட்டி (சிறுவர