Posts

Showing posts from 2021

கதைகள் செய்யும் மாயம்

Image
 சிறுவர் இலக்கிய பெருமரத்தில் நானும் ஒரு பறவையாய் அமர்ந்துள்ளதை பெரும் பேறாய் நினைத்து மகிழ்கிறேன் வாருங்கள் வாழ்த்துங்கள் நிகழ்வு ஏற்பாடு செய்துள்ள தோழமைகள் Indumathi Umesh , Anbudan Ananthi ஆகியோருக்கு மகிழ்வணக்கம் Dear all, Meet link  https://meet.google.com/yzb-sbgu-gnd Sunday 26 Dec 2021  Timeslot 4.00 - 5.00 p.m.

New Rhymes book

Image
  #lollipopchildrensworld நூல்அறிமுகம் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் Geetha Mathi அவர்கள் எழுதி உள்ள சிறுவர்களுக்கான பாடல்கள் மற்றும் கதைப் பாடல்கள் நூல் #கொக்கரக்கோ... விரைவில் குழந்தைகள் கைகளில் தவழ உள்ளது. இவரை அறிமுகம் செய்து வைத்த Kalayarassy Pandiyan அவர்களுக்கு நன்றி. இந்நூல் #லாலிபாப்_சிறுவர்_உலகத்தில் வெளியாகிறது

Lollipop books

Image
 உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி  இறப்ப நிழற்பயந் தாஅங் கறப்பயனும் தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்  வான்சிறிதாப் போர்த்து விடும். பொருள்:மிகமிகச் சிறியது ஆலின் விதை. அது மண்ணில் விழுந்து முளைத்துப் பெரிய மரமாகிப் பலநூறு பேர் வந்து தங்க இடமும் நிழலும் தருகிறது. அது போலத்தான் செய்யப்படுகிற நல்லறத்தின் அளவு சிறிதாக இருக்கலாம். ஆனால், அது தக்காருக்குத் தக்க சமயத்தில் செய்யப் பட்டதா யிருப்பின் அதன் பயன் வானத்தைவிட விரிந்தது...உயர்ந்தது. என்கிற #நாலடியார் கூற்றபடி தமக்கு தெரிந்த நண்பரிடம் லாலிபாப் சிறுவர் உலகத்தின் நூல்களை அறிமுகப்படுத்திய கதைசொல்லி KavithaAthai KuttiesKathaigal அவர்களுக்கு நன்றி. இத்தனை நூல்களும் இராமநாதபுரம் சென்றுள்ளன. அங்குள்ள குழந்தைகள் படிக்கவும்.‌‌.. நூலகத்தில் வாசிக்கவும் சிங்கப்பூரில் பணிபுரியும் திரு. விஜயகாந்த் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். அவருக்கும் அவரை அறிமுகம் செய்த கதைசொல்லி கவிதாவுக்கும் லாலிபாப் குழந்தைகள் மற்றும் எழுத்தாளர்கள் சார்பில் வாழ்த்துகள். இந்தச் சிறந்த பணி மற்ற தோழமைகளும் செய்தால் அதிக நூல்கள் திசையெங்கும் பரவும். கன்னிக்கோவில்இராஜா

Book release

Image
 #booksrelease கடந்த ஓராண்டுக்கு மேலாக முகநூல் வழியே நட்புறவை வளர்த்தவர் உமா அபர்ணா அவர்கள்‌. Pachyderm Tales மூலம் வெளியான லதாசங்கர் அவர்கள் எழுதிய "அம்புட்டு ஆசை", "மேரி என்ற மாரி" ஆகிய சிறுகதை நூல்கள் மாலாமாதவன் அவர்கள் எழுதிய " பாதாளக் கரண்டி", "ஆதித்யா ஒன்றாம் வகுப்பு" என்கிற நூல்கள் சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் வெளியிடப்பட்டன. நூல்களை நான் (கன்னிக்கோவில் இராஜா) வெளியிட திருமதி உமா அபர்ணா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். ஒளிப்படங்கள்: ரவிவர்மா Uma Aparna அவர்களுக்கு லாலிபாப் சிறுவர் உலகம் சார்பாக #புத்தகமாலை அணிவிக்கப்பட்டது

4ஆம் வகுப்பு மாணவியின் நூல்

Image
  #Newstorybook #லாலிபாப்சிறுவர்உலகம்  ஈரோட்டில் நான்காம் வகுப்பு மாணவி ச.ச.#சுபவர்ஷினி எழுதிய பதினைந்து கதைகள் அத்தினி காடு என்ற பெயரில் லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளது இந்தப் பதினைந்து கதைகளுக்கும் 7  மாணாக்கர்கள் ஓவியம் வரைந்து இருக்கிறார்கள் பள்ளி ஆசிரியர்கள் தமிழ் சான்றோர்கள் எனப் பலரும் வாழ்த்துரை அளித்துள்ளனர் சமகாலத்தில் சிறுவர் இலக்கியத்தை சிறுவர்கள் படைக்கப்பட்டது பெரும் வரவேற்புக்குரியது.  இந்தப் பெரும் செயலுக்கு லாலிபாப் சிறுவர் உலகம் அணிலாக இருப்பது மகிழ்வளிக்கிறது. *** நூல்: அத்தினிக் காடுநூ லாசிரியர்: ச.ச.#சுபவர்ஷினி (9 அகவை: 4ஆம்வகுப்பு) பக்கங்கள்: 104 விலை ₹99/- வெளியீடு: #லாலிபாப்சிறுவர்உலகம் 9841236965

மாணவிகள் எழுதிய நூல்கள்

Image
 வணக்கம் குழந்தைகளுக்காக கதை சொல்வதைக் காட்டிலும் குழந்தைகளை எழுத வைப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு விவசாயின் பெருமகிழ்ச்சி அறுவடையே. அப்படி ஒரு விவசாயியாய் இந்த நூல்களைப் பார்க்கிறேன். கதைப் பயிற்சியில் ஒத்துழைப்பு நல்கிவரும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி மற்றும் பெற்றோருக்கு மகிழ்ச்சியை உரித்தாக்குகிறேன் லாலிபாப் சிறுவர் உலகத்தில் ஏற்கனவே *ஹரி வர்ஷினி ராஜேஷ், கோவை *வர்தினி ராஜேஷ், கோவை *தேவசர்வஷ்யா, அமெரிக்கா *ஸ்ரீநிதி பிரபாகர், அபுதாபி ஆகியோருடன் தற்போது *சு. பிரவந்திகா, சென்னை  *ச.ச.சுபவர்ஷினி, ஈரோடு இன்னும் மூன்று குழந்தைகள் காத்திருக்கிறார்கள்  பட்டியல் நீளும்...

கதுவக்கப் பள்ளியில் லாலிபாப் புத்தகங்கள்

Image
  சிறார் நூல்கள் சிறார் கைகளில்* நீங்களும் இந்த நல்ல செயலை செய்ய நூல்களை வாங்கி பரிசளிக்கலாமே* ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், தவிட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு அமெரிக்காவில் வசிக்கும் *திரு. இளமாறன் மற்றும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி* அவர்கள் பள்ளி நூலகத்திற்கு *எழுத்தாளர்கள் கன்னிக்கோவில் இராஜா, நல்லாசிரியர் விஜயலட்சுமி, மருத்துவர் சூர்யா மற்றும் நான்காம் வகுப்பு மாணவி ஹரிவர்ஷ்னி* ஆகியோர் எழுதிய சிறுவர் இலக்கிய நூல்களை நன்கொடையாக அளித்துள்ளனர்.  *லாலிபாப் சிறுவர் உலகம் சார்பாக வாழ்த்துகள்.

சுட்டி உலகம் இதழில் சிறார் பாடல்

Image
  சிறுவர்களுக்கான சுட்டி உலகம் சேனலில் நான் எழுதிய பாடலை மிகச் சிறப்பாக அனிமேஷனோடுபதிவு செய்திருக்கிறார்கள். எழுத்தாளர்கள் Kalayarassy Pandiyan , Geetha Mathi  மற்றும் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இதையும் காண: அல்லிக் குளத்து யானை https://youtu.be/pxS9nfuu7Uk வெட்கம் கொண்ட கொக்கு https://youtu.be/YD3ChsW39DE

மாணவி எழுதிய கதை புத்தகம்

Image
  #புத்தகஅறிமுகம் குழந்தைகளிடம் படைப்புத்திறன் மண்ணுக்குள் புதைந்த விதை போல மறைந்து இருக்கிறது. விதைகளை மீட்டெடுக்கும் மழைத்துளி போல நாம் அதை வெளிக்கொணர வேண்டியது அவசியமாகிறது. பெற்றோர், ஆசிரியர், குழந்தை நலனில் அக்கறை கொண்டோர் என யாராவது ஒருவர் அதை வெளிக் கொண்டுவரும் பட்சத்தில் சிறுவர் இலக்கியம் தழைத்தோங்கும். சமகாலத்தில் சிறுவர்க்கான படைப்புகளை சிறுவர்களே படைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அந்தத் தொடர் ஓட்டத்தில் இதோ #லாலிபாப்_சிறுவர்_உலகம்  சார்பாக வெளிவந்துள்ளது #சிறகடிக்கும்_பட்டாம்பூச்சி சிறுவர் கதைகள் நூல் சென்னை, பட்டாபிராமில் வசிக்கும் #பிரவந்திகா தனது 12 கதைகளை நூலாக்கி இருக்கிறார். இந்நூலில் பல சிறுவர்கள் ஓவியங்களும் வரைந்திருக்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி. இளம் எழுத்தாளர் பிரவந்திகா மற்றும் பெற்றோருக்கும் வாழ்த்துகள்  மகிழ்ச்சி பரவட்டும். நூல்: #சிறகடிக்கும்_பட்டாம்பூச்சி நூலாசிரியர் : #சு_பிரவந்திகா முதற்பதிப்பு: 7.11.2021  வெளியீடு: #லாலிபாப்_சிறுவர்_உலகம்

லாலிபாப் சிறுவர் உலகத்தின் புதிய நூல்

Image
லாலிபாப் சிறுவர் உலகத்தின் புதிய நூல் குழந்தைகளுக்கான சிறுவர் பாடல் நூல் பெங்களூரில் வசிக்கும் எழுத்தாளர் வ. வெ. இராஜாமணி அவர்கள் கவிதைகள், கதைகள், நாவல்கள், சிறுவர் பாடல்கள், சிறுவர் கதைகள், ஆன்மிகம் என அனைத்து தளத்திலும் இயங்கி வருபவர். சிறுவர்களுக்காக இரண்டு கதை நூல்களும் இரண்டு நாவல்களும் எழுதியுள்ளார். இந்த #பாப்பா_பாப்பா_கவிபாடு என்கிற இந்த நூல் சிறுவர் பாடல் நூல். இதில் பல பாடல்கள் குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி படிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்நூலை லாலிபாப் சிறுவர் கழகத்தின் சார்பாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்நூலை வாங்கி குழந்தைகளுக்கும் நூலகத்திற்கும் பரிசளிக்கலாம்.  மகிழ்ச்சி பரவட்டும்🍭 #lollipopbooks #kidsrhymes #rajamanibook #lollipipchildrenswoeldbooks #tamillanguage #tamizhmozhi #tamilkidssong #tamilboardbooks #tamilchildrensbook #tamilkidsbooks #tamiltoddlerbooks #tamiltoddler #unique #uniquetamilbooks  

லாலிபாப்பின் புதிய வெளியீடுகள்

Image
 

புத்தகங்களைப் பரிசளிப்போம்

Image
 *நூல்களைப்_பரிசளிப்போம்* புலம்பெயர்ந்து அயல்நாட்டில் வசிக்கும் *திரு. இளமாறன் Elamaran Perumal மற்றும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி Anbudan Ananthi அவர்கள்* ஒவ்வொரு முறையும் தமிழ்வழி படிக்கக்கூடிய பள்ளிகளுக்கும் நூலகங்களுக்கும் புத்தகங்களை வாங்கி நன்கொடையாக அளித்து வருகிறார்கள். அந்த வகையில் *ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், #தேவர்மலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு* புத்தகங்களை வழங்கியிருக்கிறார்கள். இதில் பல படைப்பாளிகளின் நூல்கள் சென்று இருப்பது பாராட்டுக்குரியது இவர்களுக்கு *லாலிபாப் சிறுவர் உலகம்* சார்பாக வாழ்த்துகள். இது போல பலரும் நூல்களை வாங்கி பரிசளித்தால் படைப்பாளிகளுக்கும் படிப்பவர்களுக்கும் மிகுந்த மன நிறைவைத் தரும் என்பதில் ஐயமில்லை. மகிழ்ச்சி பரவட்டும். வழங்கப்பட்ட நூல்கள் & படைப்பாளர்கள்* 1. *வாலைத் தேடிய பல்லி (சிறுவர் கதைகள்)* நல்லாசிரியர் வ. விஜயலட்சுமி, புதுச்சேரி 2. *சென்னி முன்னா செண்பை கிராமம் (நாவல்)* மரு. சூர்யா, கன்யாகுமரி. 3. *மூணு கண்ண வந்துட்டான் (சிறுவர் கதைகள்)* ஹரிவர்ஷ்னி ராஜேஷ், கோவை *கன்னிக்கோவில் இராஜாவின் நூல்கள்:* 4. மே.. மே.. ஆட்டுக்குட்டி (சிறுவர

அமெரிக்கஸநூலகத்தில்

Image
அமெரிக்க நூலகத்தில்   அமெரிக்க நூலகத்தில்.... * அன்பென்று கொட்டு முரசே - மக்கள் * * அத்தனை பேரும் நிகராம்‌; * * இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு யாவரு மொன்றென்று கொண்டால். * - என்ற மகாகவி * பாரதியாரின் * வாக்கிற்கிணங்க சக படைப்பாளியின் படைப்புகளை அமெரிக்கா வாழ் தமிழரான * கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி * அவர்கள் * வட அமெரிக்காவின் புகழ்பெற்ற ராச்செஸ்டர் ஹில்ஸ் பப்ளிக் லைப்ரரியில் *   (Rochest er Hills Public Library, Rochester, USA ) எமது * (கன்னிக்கோவில் இராஜா) * சிறார் புத்தகங்களான.. * அப்துல்_கலாம்_பொன்மொழிகள் * * சா_பூ_திரி, * * பட்டாம்பூச்சி_தேவதை * மற்றும் நாங்கள் இருவரும் இணைந்து தொகுத்த நூல்களான * கதை_சொல்லும்_காடு (சிறுவர் கதைகள்) கவிதை_பூத்த_குளம் * ஆகிய நூல்களை நன்கொடையாக அளித்திருப்பது பெரும் மகிழ்வை தருகிறது. இந்தப் புத்தகங்களை கவிஞர் * நெல்லை அன்புடன் ஆனந்தி வழங்க,  Ms_Hilary_Maurin * , Librarian அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

சிறுவர் கதைப்பாடல் நூல்கள்

Image
 லாலிபாப் சிறுவர் உலகம் தொடங்கி ஓராண்டை கடந்துவிட்டது. அந்த குழந்தைகளுக்காக எழுதப்பட்ட கதைப்பாடல் நூல்கள் இவை நான்கு நூல்களை கடந்து தற்போது "மொச.. மொச.. முயல்குட்டி" என்ற ஐந்தாவது நூலுக்கான பாடலை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஊக்கமும் உற்சாகமும் அளிக்கிற #குழந்தைகளுக்கும்  நான் எழுதுகிற பாடலை இனிய குரலால் பாடி மகிழ்விக்கும் கவிஞர் நெல்லை #அன்புடன்ஆனந்தி அவர்களுக்கும்  இந்தப் பாடல்களை ஊடகம் வாயிலாக பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்க்கிற #மக்கள்_தொலைக்காட்சிக்கும் என்னுள் இருந்து எழுத வைத்துக் கொண்டிருக்கும் #தாய்_தமிழுக்கும் மனம்கனிந்த நன்றி. நம் குழந்தைகளுக்கு இதுபோன்ற நூல்களை வாங்கி பரிசளிப்போம்.

மரக்குதிரை

Image
  #லாலிபாப்_சிறுவர்_உலகத்தில் புதிய_முயற்சி சிறுவர் இலக்கியத்தில் பலரின் பங்களிப்பு அளப்பரியது. புதுவையைச் சேர்ந்த கவிஞரேறு #வாணிதாசன் அவர்கள் குழந்தை இலக்கியத்திற்காக பல பாடல்களை இயற்றியுள்ளார். அப்பாடல்களில் இருந்து சிலவற்றை தொகுத்து * #மரக்குதிரை தலைப்பில் வெளியிடுகிறோம். லாலிபாப் குழந்தைகள் பாடும் இவரின் பாடல் காணொளியை QR code வடிவில் மாற்றும் பணி நடைபெறுகிறது. இளைய சமுதாயத்திற்கு இவர்களின் பாடல்களைக் கொண்டுசேர்க்கும் முயற்சியில் #லாலிபாப் சிறுவர் உலகம் மூலம் ஈடுபட்டுள்ளோம். *** தங்களால் இயன்ற அளவு நூலைப் பெற்று மாணவர்களுக்கு பரிசளிக்கலாமே... **" இதற்கு உறுதுணையாக இருந்த கவிஞரேறு வாணிதாசன் அவர்களின் பெயரன் திரு.முருகன் Murugan Murugan அவர்களுக்கு லாலிபாப் சிறுவர் உலகம் சார்பாக நன்றி கவிஞரேறு வாணிதாசன் (சூலை 22 1915 - ஆகத்து 7, 1974) புதுவையைச் சேர்ந்த தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். இவர் 'பாரதிதாசன் பரம்பரை' என்றழைக்கப்படும், பாவலர் தலைமுறையில் வருபவர். மேலும் தகவலுக்கு https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%

இன்று தினமணி சிறுவர்மணியில் லாலிபாப் சிறுவர் உலக நூல்கள் அறிமுகம்.

Image
  இன்று தினமணி சிறுவர்மணியில் லாலிபாப் சிறுவர் உலக நூல்கள் அறிமுகம். நன்றி: தினமணி
Image
  சிறுவா  கதைப்பயிற்சி 2.6 ஒவ்வொரு வாரம் கதை பயிற்சி மூலம் பல குழந்தைகள் தங்களுக்கு தெரிந்த கேட்ட அனுபவ செய்திகளை கதையாக மாற்றுகிறார்கள். இந்த நிகழ்வில் குழந்தைகளோடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தங்களது கருத்துககளை பகிர்ந்தனர். ஏதோ ஒரு வெற்றிடத்தை நிரப்பிய மகிழ்ச்சியுடன் பயணிக்கிறோம். வாருங்கள் இளைய தலைமுறைக்கு இயற்கையை கதை வழியாக அறிமுகப்படுத்துவோம்.
Image
  கதைப்பயிற்சி 2.5 ஒவ்வொரு வாரம் கதை பயிற்சி மூலம் பல குழந்தைகள் தங்களுக்கு தெரிந்த கேட்ட அனுபவ செய்திகளை கதையாக மாற்றுகிறார்கள். இந்த நிகழ்வில் குழந்தைகளோடு திருச்சியிலிருந்து லதா ஆசிரியர் (Latha balaj அவர்களும், பெங்களூருவில் இருந்து முனைவர் தாமரைச்செல்வி (Thamarai Selvi அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தங்களது கருத்துககளை பகிர்ந்தனர். ஏதோ ஒரு வெற்றிடத்தை நிரப்பிய மகிழ்ச்சியுடன் பயணிக்கிறோம். வாருங்கள் இளைய தலைமுறைக்கு இயற்கையை கதை வழியாக அறிமுகப்படுத்துவோம்.

Kids English story

Image
* கதைகேளு கதைகேளு * இன்று பெங்களூரில் * Tale Tribe * 's story session அமைப்பு மூலம் எனது (கன்னிக்கோவில் ராஜா) * "பிடிங்க... பிடிங்க.. மயில்முட்டையைப் பிடிக்க" புத்தகத்தில் உள்ள இரண்டு கதைகளை குழந்தைகள் விரும்பும் வண்ணம் பொம்மைகளை வைத்து, ஆங்கிலத்தில் சொல்லி இருந்தார் கதைசொல்லி தாமரைச்செல்வி அவர்கள். * தமிழ்நாடு கர்நாடகா மற்றும் மலேசியா குழந்தைகள் இதை ஆர்வமுடன் கேட்டு மகிழ்ந்தார்கள். எனது கதைகளை ஆங்கிலத்தில் சொல்லி குழந்தைகளோடு குழந்தையாக்கிய கதைசொல்லி தாமரைச்செல்வி அவர்களுக்கு * லாலிபாப் சிறுவர் உலகம் * சார்பில் பெருமகிழ்ச்சி நன்றி.

Kalam's Proverbial Stories for Children

Image
  குழந்தைகளுக்காக நானெழுதிய " #அப்துல்கலாம் பொன்மொழிகள் கதைகள்" நூல் முனைவர் #அகல்யா அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு #BlueRose Delhiபதிப்பகத்தில் வெளியாகி உள்ளது. இப்போது #Amazon இணையத்திலும் கிடைக்கிறது. https://bluerosepublishers.com/product/kalams-proverbial-stories-for-children/ https://www.amazon.in/.../ref=cm_sw_r_cp_apa_glt_fabc... BLUEROSEPUBLISHERS.COM Kalam's proverbial stories for children | BlueRose | SELF-PUBLISHING PLATFORM Kalam’s Proverbial Stories for Children is a collection of twelve short stories in translation. Each story reflects the noble ideas Kalam sowed in the hearts of the youth, for building the self and a better India. The simple and straight forward moral woven into these stories would make great read...

கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவி ஹரிவர்ஷினி இராஜேஷ்

Image
லாலிபாப் சிறுவர் உலகத்தில் குழந்தைகளுக்கான கதைப் பயிற்சி அளித்து வருகிறேன். அந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணாக்கர்களின் கதைகள் பல இதழ்களில் வெளிவருவது மகிழ்வளிக்கிறது. கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவி ஹரிவர்ஷினி இராஜேஷ் தனது 9வது வயதில் 9 நூல்களை எழுதி, அந்நூல்களை கோவையைச் சுற்றி 9 இடங்களில் வெளியிட்டு சாதனை புரிந்துள்ளார். கதைகளுக்கு அவரின் சகோதரி வர்த்தினி இராஜேஷ் ஓவியங்கள் வரைந்துள்ளார். இந்த சகோதரிகளின் சாதைனயை #லாலிபாப்_சிறுவர்_உலகம் பாராட்டி மகிழ்கிறது. 17 Anbudan Ananthi, Umayavan Ramasamy and 15 others 1 comment Like Comment Share

லாலிபாப் சிறுவர் உலகம் வழங்கும் கதைப் பயிற்சி

Image
  *லாலிபாப் சிறுவர் உலகம் வழங்கும் கதைப் பயிற்சி* ஞாயிறு ஆகஸ்ட் 22 காலை 8:30 மணிக்கு........ *சிறார்கள்... சிறுவர் கதைகளை எப்படி எழுதலாம் என கன்னிக்கோவில் இராஜா மாமா கதைப் பயிற்சி அளிக்கிறார்* அனைவரும் இணையலாம் *வாங்க செல்லங்களா! கதை எழுதி மகிழ்ந்திடலாம்*

#லாலிபாப்_சிறுவர்_உலகத்தில் கதைப்பயிற்சி பெற்ற மாணவியின் சாதனை

Image
  #லாலிபாப்_சிறுவர்_உலகத்தில் கதைப்பயிற்சி பெற்ற மாணவியின் சாதனை லாலிபாப் சிறுவர் உலகத்தில் குழந்தைகளுக்கான கதைப் பயிற்சி அளித்து வருகிறேன். அந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணாக்கர்களின் கதைகள் பல இதழ்களில் வெளிவருவது மகிழ்வளிக்கிறது. கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவி ஹரிவர்ஷினி இராஜேஷ் தனது 9வது வயதில் 9 நூல்களை எழுதி, அந்நூல்களை கோவையைச் சுற்றி 9 இடங்களில் வெளியிட்டு சாதனை புரிந்துள்ளார். கதைகளுக்கு அவரின் சகோதரி வர்த்தினி இராஜேஷ் ஓவியங்கள் வரைந்துள்ளார். இந்த சகோதரிகளின் சாதைனயை #லாலிபாப்_சிறுவர்_உலகம் பாராட்டி மகிழ்கிறது.

Book for SALE

Image
  #BookforSALE படைப்பாளிகளுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் வணக்கம். சிறுவர் இலக்கிய நூல்களை கொண்டு சேர்க்க உங்கள் நிகழ்வுகளில் சிறுவர் இலக்கிய புத்தகங்களை பரிசளியுங்கள். அவை வளரும் இளம் குருத்துகளுக்கு நல்ல உரமாக அமையும். மகிழ்ச்சி பரவட்டும் 1. யானைக்கு உதவிய எறும்புகள் சிறுவர் சிறுகதைகள் - இடைமருதூர் கி. மஞ்சுளா 2. வாலைத் தேடிய பல்லி சிறுவர் சிறுகதைகள் - நல்லாசிரியர் விஜயலட்சுமி 3. கோலிக்குண்டு சிறுவர்கள் எழுதிய சிறுவர் பாடல்கள் - தொகுப்பாசிரியர்: ராஜேஸ்வரி ஸ்ரீதர் 4. நாய்க்குட்டி பட்டாளம் சிறுவர் சிறுகதைகள் - காரை. இரா.மேகலா 5. மந்திரப் பெட்டி சிறுவர் நாவல் எழுத்தாளர் வ.வெ. ராஜாமணி 6. கீக்கி கிளியக்கா சிறுவர் கதை பாடல் -கன்னிக்கோவில் இராஜா