Arivoli Readers Club
உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி இறப்ப நிழற்பயந் தாஅங் கறப்பயனும் தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும். (நாலடியார்: 38) மிகமிகச் சிறியது ஆலின் விதை. அது மண்ணில் விழுந்து, முளைத்துப் பெரிய மரமாகிப் பலநூறு பேர் வந்து தங்க இடமும் நிழலும் தருகிறது. அது போலத்தான் செய்யப்படுகிற நல்லறத்தின் அளவு சிறிதாக இருக்கலாம். ஆனால், அது தக்காருக்குத் தக்க சமயத்தில் செய்யப் பட்டதாயிருப்பின் அதன் பயன் வானத்தைவிட விரிந்தது, உயர்ந்தது. *** ஓலைச்சுவடி Books உடன் இணைந்து அறிவொளி வாசிப்புக் குழு நடத்திய சிறார்களுக்கான கதை சொல்லல் போட்டியில் கலந்து கொண்ட அத்தனை குழந்தைகளுக்கும் பரிசாக புத்தங்கள் வழங்கியது. லாலிபாப் சிறுவர் உலகம் வெளியிட்ட நூல்களை வாங்கி பரிசளித்து இருப்பதை பாராட்டி வரவேற்கிறோம்.