புத்தகத் தூதுவர்
*கொட்புன்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை (குறள்:789)*
நம் வாழ்நாளில் நாம் பலருக்குப் புத்தகங்களைப் பரிசளிக்கிறோம்; நமக்குப் பலர் பரிசளிக்கிறார்கள். வாசிக்கிறோம்; வரிசையாக அடுக்கி வைக்கிறோம்.
ஒரு சிலர் வாசித்த நூல்களை வாசிப்போருக்குப் பரிசளிக்கிறார்கள்.
பெங்களூருவில் வசிக்கும் *பேராசிரியர் கதைசொல்லி தாமரைச்செல்வி* அவர்களுக்கு, *லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பித்த நூல்களையும், அமெரிக்காவில் வசிக்கும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்களின் நூல்களையும் பரிசாக அனுப்பியிருந்தோம்.*
அவற்றைப் படித்து *Tale Tribe* நிகழ்வின் மூலம் கதைகளாக, நூல் விமர்சனமாகச் செய்து வருவதோடு தான் செல்லும் பள்ளி, கல்லூரிக்கு பரிசாக வழங்கியும் வருகிறார்.
அண்மையில் *கோயம்புத்தூர் CS Academy பள்ளிக்கு, கன்னிக்கோவில் இராஜா, கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி, எழுத்தாளர் கொ.மா.கோ. இளங்கோ* மற்றும் சில படைப்பாளர்களின் நூல்களைக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார்.
அவரை *லாலிபாப் சிறுவர் உலகம்* மற்றும் "நூலேணி புத்தக வீதி* வாழ்த்தி வணங்குகிறது.
சிறப்பு
ReplyDelete