Posts

மகிழ்ச்சி பரவட்டும்.

Image
 தாத்தா பாட்டி ஊருக்கு செல்லும் போது படிக்க எடுத்துச் சென்ற 'பீப்பீ' புத்தகத்தை படித்து முடித்தவுடன் அந்த ஊரில் பள்ளி மேலாண்மைக்குழு மறுக்கூட்டமைப்பு  கூட்டத்திற்கு சென்றிருக்கின்றனர் சாய்ஹரணி - ஸ்ரீஹரி பிரணவ் குடும்பத்தினார். கொண்டு சென்ற நூலை பள்ளிக்கு பரிசளித்து மகிழ்ந்தனர். மகிழ்ச்சி பரவட்டும்.

Haiku Book Competition

Image
  கன்னிமாரா வாசகர் வட்டம் நூலேணி புத்தக வீதி நடத்தும் ஹைக்கூ நூல் போட்டி - 2021

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் 'பொம்மை வீடு' சிறார் பாடல்கள் நூல்

Image
  லாலிபாப் சிறுவர் உலகத்தில் பதிப்பிக்கப்பட்ட எழுத்தாளர் அருப்புக்கோட்டை செல்வம் அவர்களின்  பொம்மை வீடு சிறார் பாடல்கள் நூல், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம், அருப்புக்கோட்டை செல்வம் அவர்களின் மகன் திரு. தெய்வமணி  அவர்கள் வழங்கினார். அந்நூலைப் பெற்றுக் கொண்ட கவிப்பேரரசு அவர்கள் எழுத்தாளருக்கும், அவரது மகனுக்கும் வாழ்த்தினை எழுதி தந்து மகிழ்வித்தார்.

#கரடி_டாக்டருக்கு_பரிசு

Image
  #கரடி_டாக்டருக்கு_பரிசு அருந்தமிழ்க் கவிமுகில் 50 வது பிந்தநாள் விழாவில் சிறார் இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற நிவேதிதா பதிப்பகம் பதிப்பித்த #கரடி_டாக்டர் நூலிற்காக எழுத்தாளர் #கன்னிக்கோவில் #இராஜாவுக்கு ரூபாய் 5000 ரொக்கப் பரிசினை காவல்துறை கூடுதல் இயக்குனர் (தொடரித்துறை) வி. #வனிதா இ.கா.ப. அவர்கள் வழங்கினார். உடன் கவிஞர்கள் கவிமுகில், தங்கம் மூர்த்தி மற்றும் பலர். அந்த நேரத்திலும் சிறப்பு விருந்தினர்களிடம் கன்னிக்கோவில் இராஜாவை அறிமுகப்படுத்திய இனிய தோழமை கவிஞர் #தங்கம்மூர்த்தி அவர்களுக்கு நன்றி.

#நூல்களைக்_காக்கும்_நூலகர்

Image
  #நூல்களைக்_காக்கும்_நூலகர் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் வெளிவருகிற சிறுவர் இலக்கியம், பிற இலக்கியம் என பல நூல்களை வாங்கி அதனை தனது சொந்த செலவில் கணிப்பொறியில் (பல்லாயிரக் கணக்கான நூல்களை) பதிவேற்றம் செய்து வருகிறார் 88 வயது இளைஞரான நூலகஞானி #பெருமாள் ஐயா அவர்கள் அவரின் சேவையை நான் எழுதிய நூலில் ஒரு பக்கத்தைக் காணிக்கையாக்கி இருக்கிறேன். இது ஒரே ஒரு துளிதான். ஆனாலும் எனக்கு மகிழ்ச்சி. இவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்த தோழமை நிவேதிதா பதிப்பகம் உரிமையாளர் #தேவகிராமலிங்கம் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி. இன்று அந்த நூலை அவரிடம் ஒப்படைக்கும் போது ஒரு குழந்தையை தூக்குவது போல போல பெற்றுக் கொண்டார். ஒளிப்படத்தில் என்னோடு கவிஞர் #ஹாரிங்டன்_அரிகரன்

சிறார் கதைகளை எழுதிய படைப்பாளர்கள்

Image
  வெளிவந்து விட்டது - 'காணாமல் போன சிறகுகள்' – சிறார்க் கதைத் தொகுப்பு.. குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டின் துவக்க நாளான 07-11-2021 அன்று, சுட்டி உலகமும், சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் நடத்தும் லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து, சிறார் கதைப்போட்டி ஒன்றை அறிவித்தோம். அப்போட்டியில் பரிசு வென்றவர்களுக்குப் பரிசு அளித்து ஊக்கப்படுத்தினோம். மேலும் பரிசு வென்ற கதைகளைத் தொகுத்து ஆவணப்படுத்தும் எண்ணத்துடன், அவற்றைத் தொகுத்து ஒரு நூலாகக் கொண்டு யர விரும்பினோம். அப்பணி இனிதே நிறைவடைந்து நூல் வெளிவந்து விட்டது என்பதை அறிவிப்பதில் மகிழ்கின்றோம். கதைகளை எழுதிய சிறார் படைப்பாளர்களுக்கு, ஒரு பிரதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இதில் 12 சிறுவர்கள் எழுதிய கதைகள் தொகுக்கப்பெற்றுள்ளன. கதைகளை நன்றாக உள்வாங்கி, இவற்றுக்கு 13 மாணவர்கள் வரைந்த பொருத்தமான, அழகான கருப்பு வெள்ளை ஓனியங்களும் இடம் பெற்றுள்ளன. சிறார் ஓவியர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும்! முதல் பரிசு பெற்ற 'அனுக்கிரஹா கார்த்திக்" எழுதிய கதையின் பெயரே, புத்தகத்தின் தலைப்பாகத் ...

இளம் எழுத்தாளரை வாழ்த்தலாம் வாங்க

Image
இளம் எழுத்தாளரை வாழ்த்தலாம் வாங்க 23 அன்புடன் ஆனந்தி, Kalayarassy Pandiyan and 21 others 7 comments 6 shares Like Comment Share