#நூல்களைக்_காக்கும்_நூலகர்

 #நூல்களைக்_காக்கும்_நூலகர்

கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் வெளிவருகிற சிறுவர் இலக்கியம், பிற இலக்கியம் என பல நூல்களை வாங்கி அதனை தனது சொந்த செலவில் கணிப்பொறியில் (பல்லாயிரக் கணக்கான நூல்களை) பதிவேற்றம் செய்து வருகிறார் 88 வயது இளைஞரான நூலகஞானி #பெருமாள் ஐயா அவர்கள்
அவரின் சேவையை நான் எழுதிய நூலில் ஒரு பக்கத்தைக் காணிக்கையாக்கி இருக்கிறேன். இது ஒரே ஒரு துளிதான். ஆனாலும் எனக்கு மகிழ்ச்சி.
இவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்த தோழமை நிவேதிதா பதிப்பகம் உரிமையாளர் #தேவகிராமலிங்கம் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி.
இன்று அந்த நூலை அவரிடம் ஒப்படைக்கும் போது ஒரு குழந்தையை தூக்குவது போல போல பெற்றுக் கொண்டார்.
ஒளிப்படத்தில் என்னோடு கவிஞர் #ஹாரிங்டன்_அரிகரன்


Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01