Lollipop books


 உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி 

இறப்ப நிழற்பயந் தாஅங் கறப்பயனும்

தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால் 

வான்சிறிதாப் போர்த்து விடும்.

பொருள்:மிகமிகச் சிறியது ஆலின் விதை. அது மண்ணில் விழுந்து முளைத்துப் பெரிய மரமாகிப் பலநூறு பேர் வந்து தங்க இடமும் நிழலும் தருகிறது. அது போலத்தான் செய்யப்படுகிற நல்லறத்தின் அளவு சிறிதாக இருக்கலாம். ஆனால், அது தக்காருக்குத் தக்க சமயத்தில் செய்யப் பட்டதா யிருப்பின் அதன் பயன் வானத்தைவிட விரிந்தது...உயர்ந்தது.

என்கிற #நாலடியார் கூற்றபடி தமக்கு தெரிந்த நண்பரிடம் லாலிபாப் சிறுவர் உலகத்தின் நூல்களை அறிமுகப்படுத்திய கதைசொல்லி KavithaAthai KuttiesKathaigal அவர்களுக்கு நன்றி.

இத்தனை நூல்களும் இராமநாதபுரம் சென்றுள்ளன. அங்குள்ள குழந்தைகள் படிக்கவும்.‌‌.. நூலகத்தில் வாசிக்கவும் சிங்கப்பூரில் பணிபுரியும் திரு. விஜயகாந்த் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். அவருக்கும் அவரை அறிமுகம் செய்த கதைசொல்லி கவிதாவுக்கும் லாலிபாப் குழந்தைகள் மற்றும் எழுத்தாளர்கள் சார்பில் வாழ்த்துகள்.

இந்தச் சிறந்த பணி மற்ற தோழமைகளும் செய்தால் அதிக நூல்கள் திசையெங்கும் பரவும்.

கன்னிக்கோவில்இராஜா

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01