மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றம்
மேலக்காண்டை மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றம் சார்பி
ல் நடைபெற்ற முப்பெரும் விழாவில் லாலிபாப் சிறுவர் உலகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அவர்தம் சாதனைகளை மையப்படுத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு அரிமா மதியழகன் அவர்கள் தலைமை தாங்கினார்
கவிஞர் தமிழ்பிரியன், திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் தமிழ் அமுதன் அவர்கள் மற்றும் குழுவினர் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
தமிழகத்தின் பல பகுதியில் இருந்து வந்திருந்த குழந்தைகள் தங்களது தனித்திறமைகளை கலை நிகழ்ச்சியாக செய்து காட்டியது பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்தன.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு லாலிபாப் சிறுவர் உலகம் சார்பாக இனிய வாழ்த்துகள்.
நாள் 2.4.2022
இடம்: AVK மஹால், சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர்.
Comments
Post a Comment