தான் எழுதிய பல கதைகளில் இருந்து வெறும் ஏழு கதைகளை எடுத்து *லட்சத்தில் ஒருத்தி* என்ற பெயரில் சிறுகதை நூலாக்க முடிந்தார் எழுத்தாளர் *செம்மை உமா* அவர்கள் *நூலேணி பதிப்பகம்* பதிப்பித்த இந்த நூல் இன்று *தினமலர்* இதழில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. *எழுத்தாளரின் முதல் நூலை வாங்கி பாராட்டுவோம். அதன்மூலம் மகிழ்ச்சியைப் பரப்புவோம்.* நூல் விலை ₹130 + அஞ்சல் தொகை ₹20 *மொத்தம் ₹150/- செலுத்துங்கள். சிறந்த சிறுகதை நூல் இல்லம் தேடி வரும்*
#நூல்அறிமுகம் நூல்: #நாட்டுப்புற_இரங்கற்பா (நாட்டுப்புறக் கல்லறையில் எழுதப்பட்ட கையறுநிலை) மொழிபெயர்ப்பு : பேராசிரியர் #இராம. #குருநாதன் பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் சென்னை. 📞98412 36965 ₹100/- ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, கவிதைகளுக்குள் நுழைந்து செல்லும் போது, பேராசிரியரின் ஆங்கில ஞானத்தையும், தமிழ் அறிவையும் அறிய முடியும். மொழிபெயர்ப்பாளர் எந்தப் படைப்பாளிக்கும் துரோகம் செய்யக்கூடாது என்னும் எண்ணத்தில் ஊறிப்போய் இருப்பவர் ஒரு சிலரே. உமார்கய்யாம் பாடல்களைக் கவிமணி தமிழாக்கம் செய்திருக்கிறார். படித்துப் பார்க்கும் போதுதான் தெரியும்... உமார்கய்யாம்மைத் தேடி அலைந்து தோற்றுப் போக வேண்டியிருக்கும். ஆனால் இங்கே பேராசிரியர் இராம. குருநாதன் மொழியாக்கம்தான் செய்கிறோம் என்ற நினைப்பிலேயேயும், மூல ஆசிரியருக்கு எவ்வித துரோகமும் செய்யக்கூடாது என்ற உறுதியுடனும் செயல்பட்டதாலே, நமக்கு தாமஸ் கிரே பாமரனுக்கும் புரியும் தமிழ் மொழியில் கிடைத்திருக்கிறார். - முனைவர் பேராசிரியர் #ராஜ்ஜா மேனாள் ஆங்கிலப் பேராசிரியர் புதுவை அரசு கல் லூரி, புதுச்சேரி
அமெரிக்காவில் வசிப்பவர் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் ஏற்கனவே கவிதை கட்டுரை தன் முனைக் கவிதைகள் எனப் பல நூல்களை எழுதி இருப்பவர். சென்ற ஆண்டு "வான் மழையே வா" என்ற பெயரில் திருக்குறளின் அறத்துப்பால் குறள்களை மையப்படுத்தி சிறார் பாடலை எழுதி சிறுவர் உலகத்தில் நுழைந்தவர். இந்த ஆண்டு முதல் முறையாக நம் லாலிபாப் சிறுவர் உலகத்திற்கு "இசைப்பட வாழ்வோம் வா" என்ற பெயரில் திருக்குறள் கருத்துகளை சிறார் பாடலாக எழுதி இருக்கிறார் நவம்பர் 25ஆம் நாள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய பல்கலைக்கழகத்தில் நூல்கள் வெளியீடு வைத்திருக்கிறார். அவருக்கு லாலிபாப் சிறுவர் உலகம் சார்பாக இனிய நல்வாழ்த்துகள்
Comments
Post a Comment