குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் விழா அவர் பிறந்த இராயவரம் ச.கதி காந்தி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள சிலைக்கு மாணவர்கள் மற்றும் அழ.வள்ளியப்பா அவர்களின் மகன். வ.அழகப்பன், மாப்பிள்ளை திரு நாச்சியப்பன் அவர்களோடு இணைந்து மாலை அணிவித்தல் நிகழ்ச்சி. ஏழு ஆண்டுகளுக்கு முன் காரைக்குடி வந்தபோது சென்று காண ஆசைப் பட்டேன். நேர சிக்கலால் பார்க்க முடியாமல் போனது. 2025 ஆம் காண கிடைத்ததிலும் மாலை அணிவித்ததிலும் லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பித்த நூல்கள் சிலவற்றை அவர் பார்வைக்கு கொண்டு சென்றதிலும் பெரு மகிழ்ச்சி
தான் எழுதிய பல கதைகளில் இருந்து வெறும் ஏழு கதைகளை எடுத்து *லட்சத்தில் ஒருத்தி* என்ற பெயரில் சிறுகதை நூலாக்க முடிந்தார் எழுத்தாளர் *செம்மை உமா* அவர்கள் *நூலேணி பதிப்பகம்* பதிப்பித்த இந்த நூல் இன்று *தினமலர்* இதழில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. *எழுத்தாளரின் முதல் நூலை வாங்கி பாராட்டுவோம். அதன்மூலம் மகிழ்ச்சியைப் பரப்புவோம்.* நூல் விலை ₹130 + அஞ்சல் தொகை ₹20 *மொத்தம் ₹150/- செலுத்துங்கள். சிறந்த சிறுகதை நூல் இல்லம் தேடி வரும்*
லாலிபாப் சிறுவர் உலகத்தை ஏற்படுத்தி கிட்டத்தட்ட 450 குழந்தைகளை ஒருங்கிணைத்து தினமும் அவர்களுக்கான ஏதாவது ஒரு செயலாக்கத்தை/பயிற்சியைக் கொடுத்து வருகிறார் #சிறுவர்_இலக்கியச்_செம்மல் #கன்னிக்கோவில்_இராஜா அவர்கள். ஓவியம் வரைதல், கதை சொல்லுதல், பாடல் பாடுதல், எதாவது கைவினைப் பொருட்கள் செய்தல் இப்படித் தொடர்ந்து குழந்தைகளோடு சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் #எழுத்தாளர்_கன்னிக்கோவில்_இராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்தையும் முதலில் பதிவு செய்து கொள்கிறேன். தான் மட்டும் உயராமல், தனக்கென மட்டும் என்று யோசிக்காமல் இளைய தலைமுறையினருக்கு தன்னால் இயன்ற ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, அதையே தனது இலக்காக வைத்து இயங்கிக் கொண்டிருக்கும் #எழுத்தாளர்_கன்னிக்கோவில்_இராஜா அவர்களோடு லாலிபாப் சிறுவர் உலகத்தில் இணைந்து பயணிப்பது பெருமகிழ்ச்சி. இன்றைய லாலிபாப் சிறுவர் உலகத்தின் குழந்தைகளுக்கான ஒரு பயிற்சியாக கொடுக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சியை வரைக என்ற வகையில் #ஹரீஷ் என்ற குழந்தை கன்னிக்கோவில் இராஜா அவர்களையும், வண்ணத்துப்பூச்சியையும் இணைத்து அற்புதமாக ஓவ...
Comments
Post a Comment